மேற்கு கனடாவில் தீவிரமடையும் காட்டுத்தீ ; பிரிட்டிஷ் கொலம்பியாவில் அவசர நிலை அறிவிப்பு
மேற்கு கனடாவில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் காட்டுத்தீ, ஒரே இரவில் இரண்டு மடங்கிற்கும் அதிகமான பகுதிக்குப் பரவியுள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவில் கிட்டத்தட்ட 23,500 ஏக்கர் பரப்பளவிற்கு இந்த காட்டுத்தீ பரவியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காட்டுத்தீ பரவும் வேகம் காரணமாக பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண அரசு அவசரநிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளதுடன், கிட்டத்தட்ட 20,000 மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.