;
Athirady Tamil News

ரணிலை ஜனாதிபதியாக நியமிக்க தீர்மானம் !!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக நியமிக்க, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த பெரும்பான்மையான உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. http://www.athirady.com/tamil-news/news/1557929.html…

மஹிந்த, பசிலுக்கு எதிராக மனுத்தாக்கல் !!

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் மற்றும் பலருக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் இன்று (12( மனுவொன்று தாக்கல்…

பாண் விலை அதிகரிப்பு!!

450 நிறைகொண்ட ஒரு இறாத்தல் பாணின் விலை 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இந்த விலை இன்று (12) நள்ளிரவு முதல் அமுலாகும் என சங்கம் அறிவித்துள்ளது. இதற்கமைய பாணின் புதிய விலை 190 ரூபாய்…

கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு !!

கொட்டாஞ்சேனையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்து, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஹின்னி அப்புஹாமி சந்தியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தம்பதியினர் மீதே துப்பாக்கிப் பிரயோகம்…

ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலை ஏற்றுக்கொள்ளவோ நியாயப்படுத்தவோ முடியாது.!!

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலையும் ஏற்றுக்கொள்ளவோ நியாயப்படுத்தவோ முடியாதென யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு முன்பாக இடம்பெற்ற போராட்டத்திற்கு பின்னர்…

விமான நிலைய ஊழியர்கள் எடுத்துள்ள தீர்மானம்!!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள பட்டுப்பாதை முனையத்தின் செயற்பாடுகளில் இருந்து விலகுவதற்கு ஸ்ரீலங்கா நிதஹஸ் சேவக சங்கமய (SLNSS) தீர்மானித்துள்ளது. அவர்களது தொழிற்சங்க போராட்டம் இன்று (12) நண்பகல் 12 மணி முதல்…

இலங்கைக்கு அழைப்பு விடுத்துள்ள ஐ.நா!!

இலங்கையில் சுமூகமான ஆட்சி மாற்றத்தை உறுதி செய்வதற்கும், பொருளாதார நெருக்கடிக்கு நிலையான தீர்வுகளைக் காண்பதற்கும் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் அழைப்பு விடுத்துள்ளார்.…

நாட்டை மீளக் கட்டியெழுப்ப முடியும்!! (வீடியோ)

நாட்டை மீளக் கட்டியெழுப்ப முடியும் எனவும், அந்த கடினமான பணியை சஜித் பிரேமதாசவினால் செய்ய முடியும் எனவும் ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ…

ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலை கண்டித்து யாழ்.பல்கலைக்கழகம் முன்றலில் கண்டன போராட்டம்!!…

ஊடக அடக்கு முறை , ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலை கண்டித்து யாழ்.பல்கலைக்கழகம் முன்றலில் கண்டன போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்.பல்கலைக்கழக முன்றலில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மதியம் 12 மணியளவில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.…

கண்டி வீதியை மறித்து போராட்டம்!!

எரிபொருள் வழங்க கோரி யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையை வழிமறித்து யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு அருகில் உள்ள ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நீண்ட நாட்களாக…

இன்று எரிவாயு விநியோகிக்கப்படும் இடங்கள்!!

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள எரிவாயு விநியோக நிலையங்கள் தொடர்பில் லிட்ரோ எரிவாயு நிறுவனம் இன்று (12) அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில் இன்று (12) எரிவாயு விநியோகிக்கப்படும் நிலையங்களை காணலாம்

பிரதமர் பதவியை தமிழர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடாது !!

தற்போதைய சூழ்நிலையில், பிரதமர் பதவியை தமிழர்கள் யாரும் ஏற்றுக்கொள்ளக்கூடாது. அவ்வாறு ஏற்றுக்கொண்டால் தமிழ்மக்களையும் ஒரு அரசியல் சதிவலைக்குள் கொண்டுசென்று நெருக்குகின்ற நிலமையினை உருவாக்கும் என பா.உ வினோநோகராதலிங்கம் தெரிவித்தார்.…

பிரதமரின் ஊடகப் பிரிவிலுள்ள சில பொருள்கள் மாயம் !!

அலரிமாளிகையின் ஊடகப் பிரிவிலுள்ள பொருள்கள் பல திருடிச் செல்லப்பட்டுள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு கொள்ளுப்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளது. இதற்கமைய, ஊடகப் பிரிவிலிருந்த மடிக்கணினிகள் இரண்டு, வீடியோ கமெரா ஒன்று உள்ளிட்ட…

பணவீக்கம் – இலங்கையை பின் தள்ளிய நாடு!!

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக பணவீக்க அறிக்கையில் இலங்கை மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது. நேற்று (11) வெளியிடப்பட்ட சமீபத்திய அறிக்கையின்படி, பணவீக்க சுட்டெண்ணில் இரண்டாவது இடத்தில் இருந்த இலங்கை மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.…

இன்று முதல் விவசாயிகளுக்கு யூரியா உரத் தொகை விநியோகம்!!

இந்திய அரசாங்கத்தால் இந்நாட்டுக்கு பெற்றுக் கொடுக்கப்பட்ட யூரியா உரத் தொகை இன்று முதல் விநியோகிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த தினம் இந்நாட்டிற்கு வந்தடைந்த உரக் கப்பலில் இருந்து உரத்தை தரையிறக்கும் பணிகள்…

வவுனியாவில் இ.போ.ச.பேரூந்து மீது கல் வீச்சு யுவதி கைது!!

வவுனியா புளியங்குளம் பகுதியில் நேற்று(11) இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேரூந்து மீது கல் வீச்சு மேற்கொண்ட குற்றத்திற்காக யுவதி ஒருவர் கைது செய்ப்பட்டுள்ளதாக புளியங்குளம் பொலிசார் தெரிவித்துள்ளார் யாழ்ப்பாண…

இராஜினாமா கடிதத்தில் கையெழுத்திட்ட ஜனாதிபதி !!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை (13) திகதியிட்ட இராஜினாமாக கடிதத்தில் அவர் நேற்று (11) கையெழுத்திட்டுள்ளதாக எமது சகோதர பத்திரிகையான டெய்லி மிரர் செய்தி…

யாழ்ப்பாணம் – வண்ணார்பண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் தேர்த் திருவிழா!! (படங்கள்)

யாழ்ப்பாணம் – வண்ணார்பண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் தேர்த் திருவிழா இன்று(12.07.2022) காலை பக்தி பூர்வமாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

இன்றைய காலநிலை விபரம் !!

சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய…

ப்ளெய் டுபாய் இலங்கை வராது!!

இலங்கையில் நிலவும் நெருக்கடி நிலைமை காரணமாக ஐக்கிய அரபு இராச்சியத்தின் ப்ளெய் டுபாய் நிறுவனம் இலங்கைக்கான அனைத்து விமானப் பயணங்களையும் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது. அதன்படி, ஜூலை மாதம் 10 ஆம் திகதி முதல் மறு அறிவித்தல் வரை துபாய்…

விமான நிலையத்தில் பசில் ராஜபக்சவுக்கு ஏற்பட்ட நிலை!! (வீடியோ)

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச நாட்டில் இருந்து வெளியேற முயற்சித்தபோதும், அது பயனளிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை அவர், வெளிநாடு செல்வதற்காக கட்டுநாயக்க வானுார்தி நிலையத்துக்கு சென்றபோது, அவரின் ஆவணங்களை…

கட்சி தலைவர்களுடன் போராட்டக்காரர்கள் சந்திப்பு !!

காலிமுகத்திடல் போராட்டத்தில் ஈடுபடும் தரப்பினருக்கும் கட்சி தலைவர்களுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இன்று இடம்பெறவுள்ளது. இந்த கலந்துரையாடலில் காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபடும் தரப்பினரை அங்கத்துவப்படுத்தி 25 பேர்…

அலரிமாளிகை மோதல்; 10 பேர் வைத்தியசாலையில் !!!

அலரிமாளிகைக்குள் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் குறைந்தது 10 ஆர்ப்பாட்டக்காரர்கள் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், அவர்களில் 2 பேர் சிகிச்சைப் பெற்று…

இந்திய மீனவர்கள் கைது !!

எல்லை தாண்டி மீன் பிடித்த ஆறு இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் - காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடித்துக்கொண்டிருந்த ஒருபடகை கைப்பற்றிய கடற்படையினர் அதிலிருந்த 6 இந்திய மீனவர்களையும் கைதுசெய்தனர்.…

ரணில் விக்ரமசிங்கவின் ஜனாதிபதி கனவு பலிக்குமா?

ரணில் விக்ரமசிங்கவின் நீண்ட நாள் ஜனாதிபதி கனவு பலிக்குமா? அல்லது அவர் தொடர்ந்தும் சாதாரண தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக தொடர்வாரா? அதேபோன்று சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக பதவியேற்பாரா? அவரின் சர்வ கட்சி அரசாங்கத்தில் டளஸ் அழகப்பெரும…

ஜனாதிபதி நாட்டில் உள்ளார் – முப்படை தளபதிகளை சந்தித்துள்ளார்!!

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நாட்டிலேயே உள்ளார் இன்று காலை முப்படை தளபதிகளை சந்தித்துள்ளார் என தெரியவருவதாக டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது. 9ம் திகதி ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து இலங்கையின் கடற்பரப்பிற்குள் கடற்படை கலத்தில் தங்கியிருந்த…

பதவிவிலகுகிறார் கோட்டா? (கட்டுரை)

ஜனாதிபதிப் பதவியிலிருந்து கோட்டாபய, எதிர்வரும் 13ம் திகதி, புதன் கிழமை, எசல பௌர்ணமி தினத்தன்று, விலகுவதாக சபாநாயகருக்கு தெரிவித்திருப்பதாக செய்தியறிக்கைகள் குறிப்பிடுகின்றன. 2022 ஜூலை 9ம் திகதி நடந்த பெரும் ஆர்ப்பாட்டத்தையடுத்து,…

தொற்று நோய்களாக மாறிவரும் தொற்றா நோய்கள்!! (மருத்துவம்)

தொற்றா நோய்களின் பொதுக் காரணியாகவும் அடிமைப்படுத்தும் அடிப்படை ஆபத்துக் காரணிகளில் முதல் நிலை முக்கியத்துவம் பெறுவதுமான புகைத்தல் மற்றும் அதனைத் தடுத்தல் பற்றி இந்த வாரப்பகுதி ஆராயவிருக்கிறது. மனவழுத்தம் மற்றும் மனச்சோர்வு குறைதல்,…

கொழும்பு வருகின்றன எரிபொருள் கப்பல்கள் !!

இந்த வாரத்தில், மூன்று எரிபொருள் கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, இன்று (11) தெரிவித்தார். அதற்கமைய, நாளை (12) முதல் 15ஆம் திகதிக்கு இடையில் டீசல் கப்பலும், இம்மாதம் 14ஆம் திகதி…

கோட்டா தொடர்பான கதையை மறுத்தார் மஹிந்த !!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நாட்டிலேயே இன்னும் இருக்கின்றார். பிபிசிக்கான நேர்காணலின் போது நான் தவறு செய்துவிட்டேன் என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். இந்திய செய்தி சேவையான ஏஎன்ஐ க்கு, தொலைப்பேசி ஊடாக வழங்கிய…

ஜனாதிபதி பதவிக்கு சஜித் பிரேமதாஸவை நியமிக்க ஏகமனதாக தீர்மானம்!!

இடைக்கால ஜனாதிபதி பதவிக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை நியமிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது. கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் கொண்டுவரப்பட்ட இந்த…

மத்திய வங்கியின் ஆளுநரின் முக்கிய அறிவிப்பு!!

நாட்டில் தற்போது நிலவும் அரசியல் ஸ்திரமின்மை காரணமாக சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை தடைப்படலாம் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க சர்வதேச…

ஹெல்மட்டை வீசிய அதிகாரி ஆயுதத்துடன் கைது !!

ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவி விலக வேண்டும் என்று கோரி சனிக்கிழமை (09) நடத்தப்பட்ட மக்கள் போராட்டத்துக்கு ஆதரவு வழங்கிய பொலிஸ் அதிகாரி, கொழும்பு, கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்குள் இன்று (11) அதிகாலை கூரிய ஆயுதத்துடன் நுழைந்த போது…