;
Athirady Tamil News

தவறான முடிவெடுத்த பல்கலைக்கழக மாணவன் உயிரிழப்பு – கிளிநொச்சியில் சோகம் !!

கிளிநொச்சியில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். கிளிநொச்சி காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட விவேகானந்தா நகர் 155 ஆம் கட்டை பகுதியில் வசிக்கும் சந்திரமேனன் தேனுஜன் (வயது 21) என்ற பல்கலைக்கழக மாணவனே இவ்வாறு…

RIP Cheems : உலகையே சிரிக்க வைத்த சீம்ஸ் நாய் விடைபெற்றது – புற்று நோய் காரணமா?

சமூக வலைதளங்களில் வைரலாக அடிக்கடி பரவும் புகைப்படங்களில் இதுவும் ஒன்று. நெட்டிசன்கள் மத்தியில் "சீம்ஸ்" என்று செல்லமாக அழைக்கப்படும் வைரல் நாய் உயிரிழந்து விட்டதாக, அதன் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். சமூக வலைதளங்களில் மூழ்கியே கிடக்கும்…

வெங்காயத்திற்கு 40 சதவீதம் ஏற்றுமதி வரி விதிப்பு – மத்திய அரசு!!

கடந்த சில வாரங்களாகவே வெங்காயத்தின் விலை அதிகரித்து வந்தது. வரும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் பண்டிகை காலம் என்பதால் வெங்காயத்தின் விலை மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது இந்நிலையில், விலை உயர்வைக் கட்டுப்படுத்த வெங்காய…

உக்ரைன் மீது மீண்டும் ரஷிய ஏவுகணை தாக்குதல் – ஏழு பேர் பலி!!

கடந்த 2022 பிப்ரவரி மாதம் 22 அன்று, சிறப்பு ராணுவ நடவடிக்கை எனும் பெயரில் ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்ரமித்தது. இதனை கடுமையாக எதிர்த்து, ஆக்ரமிப்புக்கு பணிய மறுத்து, அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் பொருளதவியுடனும், ராணுவ…

இமாச்சல பிரதேசம் பேரிடர் பாதித்த மாநிலமாக அறிவிப்பு!!

தென்மேற்கு பருவமழையால் இமாச்சல பிரதேசம் அதிகபட்ச மழைப்பொழிவை பெற்றுள்ளது. இதனால் கடும் வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டு மோசமான பாதிப்புகளையும் எதிர்கொண்டு உள்ளது. அங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் மேகவெடிப்பு ஏற்பட்டு பேய்மழை கொட்டி…

50 வைத்தியர்களும் 20 தாதியர்களும் வெளியேற்றம்!!

வட மாகாணத்தில் ஒரு வருடத்தில் 50 வைத்தியர்களும் 20 தாதியர்களும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக வட மாகாண சுகாதார பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்தார், வவுனியா வைத்தியசாலையில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து…

மைக்கேல் ஜாக்சனை தொடரும் சர்ச்சை.. அவரே இறந்துட்டாரு.. ஆனால் வழக்கு?

"பாப் பாடல் உலகின் ராஜா" என வர்ணிக்கப்பட்டவர் அமெரிக்கவை சேர்ந்த மைக்கேல் ஜாக்சன். பாடகர், நடன கலைஞர் மற்றும் பாடலாசிரியர் என பன்முகத்தன்மை கொண்டவராக இருந்த மைக்கேல் ஜாக்சன் பெருமளவில் நன்கொடைகளை வழங்குவதிலும் புகழ் பெற்றிருந்தார்.…

ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு!!

ஈரான் நாட்டின் அதிபர் இப்ராஹிம் ரைசியுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொலைபேசியில் பேசினார். இருநாடுகளின் உறவை மேலும் வலுப்படுத்துவது மற்றும் பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர். இருநாடுகளின்…

கூட்டணி நோக்கத்தில் தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்கப்படவில்லை- டி.கே.சிவக்குமார்!!

கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நிருபர்களிடம் கூறியதாவது:- காவிரி பிரச்சினையில் கோர்ட்டு, சட்டம், அரசியல் சாசனத்தை நாம் மதிக்க வேண்டும். இதற்கு முன்பு இருந்த அரசுகளும் கோர்ட்டு உத்தரவை மதித்து தண்ணீரை திறந்து…

சிறுத்தை தாக்குதல் அச்சம்: திருப்பதிக்கு மலைப்பாதையாக வரும் பக்தர்கள் எண்ணிக்கை…

திருப்பதியில் இருந்து திருமலைக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அலிபிரி, ஸ்ரீவாரி மெட்டு ஆகிய 2 மலைப்பாதைகள் வழியாக தங்கள் குடும்பத்துடன் நடந்து சென்று ஏழுமலையானை தரிசிக்கின்றனர். ஆனால் சமீப காலமாக, அலிபிரி பாதையில் சிறுவர்களை குறி…

பெங்களூருவில் ரெயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரெயிலில் திடீர் தீவிபத்து!!

பெங்களூருவில் உள்ள சங்கொல்லி ராயண்ணா ரெயில் நிலையத்திற்கு இன்று காலை 5.45 மணிக்கு உத்யன் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. நின்று கொண்டிருந்த ரெயிலின் பி1 மற்றும் பி2 பெட்டிகளில் இருந்து திடீரென அதிக அளவில் புகை வரத்தொடங்கியதால் பரபரப்பு…

ஜனாதிபதி செயலணியின் கூட்டத்தை புறக்கணித்த தமிழ் எம்.பிக்கள்!!

மன்னார் மாவட்டத்தின் கீழ் வனவள திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகள் தொடர்பிலும் அவற்றை விடுவிப்பது தொடர்பிலான கூட்டம் இன்றைய தினம் சனிக்கிழமை(19) மன்னார் மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர்…

130 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் வடமராட்சியில் கைது!!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு முள்ளியான் கடற்பரப்பில் வைத்து இன்று அதிகாலை கஞ்சாவுடன் ஒருவரை கடற்படையினர் கைது செய்துள்ளனர். கடத்தலுக்குப் பயன்படுத்திய படகும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. 61 பொதிகளில் 130Kg கஞ்சா…

மோட்டார் சைக்கிள் – தண்ணீர் தாங்கி வாகனமும் மோதி விபத்து!!

மோட்டார் சைக்கிள் – தண்ணீர் தாங்கி வாகனமும் மோதி இடம்பெற்ற விபத்தில் கணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மனைவி படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இன்று நண்பகல் யாழ்ப்பாணம் – ஏ9 முதன்மை வீதியின் செம்மணி…

அதிகாரப் போட்டியில் சிக்கிக் கொள்ளாமல், பக்கசார்பின்றி முன்னேற வேண்டும்!!

நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பான மீளாய்வொன்றை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் இதன் போது புதிய பொருளாதாரப் போக்குகளைப் போன்றே காலநிலை மாற்றம் உள்ளிட்ட அனைத்து காரணிகள் குறித்தும் கவனம் செலுத்தப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…

ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் பரவல்: கேரளாவில் 2 பண்ணைகளில் பன்றிகளை கொல்ல உத்தரவு!!

கேரள மாநிலத்தில் மழை காலங்களில் தொற்றுநோய் பரவல் அதிகமாக இருக்கிறது. இந்த ஆண்டு தென் மேற்கு பருவமழை வழக்கம் போல் பெய்யாமல் ஏமாற்றினாலும், பருவ மழை பெய்ய தொடங்கிய போது அங்கு டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் வேகமாக பரவியது. மேலும் அங்கு பறவை…

தெலுங்கானாவில் வீட்டுக்காவலில் வைத்த போலீசாரை ஆரத்தி எடுத்து வரவேற்ற சர்மிளா!!

தெலுங்கானா மாநிலத்தில் தலித் மக்கள் பயன் பெறும் வகையில் தலித் பந்து என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தகுதி உள்ள நபர்கள் பயன்பெறும் வகையில் இந்த திட்டத்தை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்த வேண்டும் என தலித் மக்கள் போராட்டம் நடத்தி…

சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் டிக்கெட் பரிசோதகருக்கு அடி-உதை: பீகார் வாலிபர்கள் கைது!!

பெங்களூர்-டானாப்பூர் இடையே சங்கமித்ரா ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று மதியம் பெங்களூரில் இருந்து டானப்பூர் நோக்கி சங்கமித்ரா ரெயில் சென்றது. ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் ஓங்கோல் அருகே ரெயில் வந்து கொண்டு இருந்தது. இந்த ரெயிலில்…

வலுக்கும் உக்ரைன் ரஷ்யப்போர் – மேலும் ஆதரவு வழங்கும் ஜேர்மனி !!

ஜேர்மனியில் தயாரிக்கப்பட்ட "Leopard 1" டாங்கிகள் மற்றும் பிற ஆயுதங்கள் குறித்து உக்ரைன் வீரர்களுக்கு ஜேர்மன் தரப்பில் பயிற்சி அளிக்கப்பட்டுவரும் காணொளிகள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகின்றன. இந்த விடயமானது ரஷ்ய தரப்புக்களை பெரும்…

ராஜஸ்தானில் காரை வழிமறித்து 3 பேரை கொடூரமாக தாக்கிய கும்பல்- ஒருவர் பலி!!

ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டம் ராம்புரா கிராமத்தில் 3 பேர் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஒரு கும்பல் அவர்கள் சென்ற காரை வழிமறித்தது. பின்னர் அந்த கும்பல் காரில் பயணம் செய்த 3 பேரையும் உருட்டுகட்டையால் சரமாரியாக தாக்கியது. இந்த…

புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு- உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!!

சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் இதுவரை 69 கோடிக்கு அதிகமானோரை தாக்கி உள்ளது. இதில் 69 லட்சத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த வைரஸ் அடுத்தடுத்து மாறுபாடு அடைந்து புதிய வகை…

பெங்களூரு மெஜஸ்டிக் ரெயில் நிலையத்தில் நிறுத்தி இருந்த ரெயிலில் இருந்து புகை வந்ததால்…

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து வண்டி எண் 11301 உதயன் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று அதிகாலை 5.45 மணி அளவில் பெங்களூரு மெஜஸ்டிக் ரெயில் நிலையத்திற்கு பிளாட்பாரம் நம்பர் மூன்றில் வந்து நின்றது. பயணிகள் அனைவரும் இறங்கி இருந்த நிலையில்…

7 பச்சிளங் குழந்தைகளை கொன்ற நர்சு- இந்திய வம்சாவளி டாக்டர் உதவியால் சிக்கினார்!!

இங்கிலாந்தின் வடமேற்கு பகுதியில் உள்ள கவுண்டஸ் ஆப் செஸ்டர் ஆஸ்பத்திரியில் கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் முதல் 2016-ம் ஆண்டு ஜூன் வரையிலான காலக் கட்டத்தில் வழக்கத்துக்கும் அதிகமாக மகப்பேறு பிரிவில் பிறந்த குழந்தைகள் உயிரிழப்பது, திடீர் உடல்…

வீட்டுக்கடனுக்கான மாத தவணை தொகை அதிகரிக்க வாய்ப்பு!!

சொந்த வீடு என்பது அனைவரது கனவாக உள்ளது. இந்த ஆசையை பூர்த்தி செய்யும் வகையில் அரசு மற்றும் தனியார் வங்கிகள் போட்டிபோட்டுக்கொண்டு வருமானத்தை பொறுத்து லட்சக்கணக்கில் வீடு மற்றும் தனிநபர், வர்த்தக கடன்களை வழங்கி வருகிறது. கடனுக்கான…

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித யாழிற்கு விஜயம்!! (PHOTOS)

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ளார். நல்லூர் கந்தசுவாமி கோவில், ஆரியகுளம் நாக விகாரைக்கும் இன்று சனிக்கிழமை(19) காலை பாலித ரங்கே பண்டார விஜயம் செய்து வழிபாடுகளில்…

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் வேலைவாய்ப்பு தொழிற்சந்தை!! (PHOTOS)

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் வேலைவாய்ப்பு தொழிற்சந்தை இன்று காலை முதல் இடம்பெற்றுவருகிறது. தொழிற்சந்தை இன்று மதியம் ஒரு மணி வரை இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். சர்வதேச புலம்பெயர்வுக்கான அமைப்பின் அனுசரணையில்…

ரணில் விக்கிரமசிங்கவால் மாத்திரமே நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லமுடியும் –…

ரணில் விக்கிரமசிங்கவால் மாத்திரமே நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லமுடியும் என யாழ் மாவட்டஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளரும் முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சருமான விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். வட்டுக்கோட்டை தொகுதி ஐக்கிய தேசியக் கட்சி…

தைவானை சுற்றி சீனா மீண்டும் போர் பயிற்சி!!

தைவானை தங்களது நாட்டின் ஒரு பகுதி என்று சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இதற்கு தைவான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இவ்விவகாரத்தில் தைவானுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளதால் சீனா ஆத்திரம் அடைந்தது. சில மாதங்களுக்கு முன்பு தைவானை சுற்றி…

மேர்வின் சில்வாவின் கூற்று வன்மையாக கண்டிக்கத்தக்கது !!

வடக்கில் விகாரைகள் மற்றும் மகாசங்கரத்தினர் மீது வடக்கு கிழக்கில் உள்ளவர்கள் கைவைத்தால் அவர்களின் தலையை களனிக்கு கொண்டுவருவதாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்திருக்கும் கூற்று தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள மக்களை தூண்டிவிடும்…

ஸ்ரீசைலம் கோவில் வளாகத்தில் சுற்றித்திரிந்த கரடி- கூண்டு வைத்து பிடித்த வனத்துறை…

ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலம் மலையில் பிரசித்தி பெற்ற சிவன் கோவில் உள்ளது. சிவன் கோவில் அமைந்துள்ள மலை முழுவதும் அடர்ந்த வனப்பகுதி ஆகும். மலையின் கீழ் இருந்து பல கிலோமீட்டர் சென்றால் தான் கோவிலை சென்றடைய முடியம். அங்குள்ள வனப்பகுதியில் ஏராளமான…

சிறையில் உள்ள இம்ரான்கானை உணவில் விஷம் கலந்து கொல்ல சதி மனைவி குற்றச்சாட்டு!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு, ஊழல் வழக்கில் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையை விதித்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து பஞ்சாப் மாகாணத்தில் உள்ள அட்டாக் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் தனது சிறை தண்டனையை எதிர்த்து…

30,000 தாதியர்களுக்கு வெற்றிடம்!!

தாதியர் சேவையில் 30,000 இற்கும் அதிகமான வெற்றிடங்கள் நிலவுவதாக அகில இலங்கை தாதியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் எஸ்.சி. மெதவத்த தெரிவித்துள்ளார். தாதியர்களை பயிற்சியில் இணைத்துக்கொள்வதில் நிலவும் தாமதத்தினால் பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக…

கொழும்பிலிருந்து கண்டிக்கு விசேட ரயில் சேவை!!

கண்டி எசல பெரஹராவை முன்னிட்டு பொதுமக்களின் பயண வசதி கருதி 4 விசேட ரயில் சேவைகளை முன்னெடுக்கவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படுமென ரயில்வே…

77,552 சுற்றுலாப் பயணிகள் வருகை!!

2023 ஓகஸ்ட் மாதத்தின் முதல் 15 நாட்களில் 77,552 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். ஜூலை மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் நாளாந்த சராசரி வருகை 4,614 ஆக பதிவாகியிருந்த நிலையில், ஓகஸ்ட் மாதத்தில் அது 5170 ஆக அதிகரித்துள்ளது.…