;
Athirady Tamil News

யாழ்.அரியாலை GPL கிரிக்கட் தொடர்; DTS அணிக்கான அனுசரணையை வழங்கிய “M.F”.. (படங்கள்)

0

யாழ்.அரியாலை GPL கிரிக்கட் தொடர்; DTS அணிக்கான அனுசரணையை வழங்கிய “M.F”.. (படங்கள்)

யாழ்.அரியாலை காந்தி விளையாட்டுக் கழகத்தின் GPL கிரிக்கட் தொடர் இடம்பெற்று வருகின்றது. இத்தொடரில் எட்டு அணிகள் இடம்பெற்று விளையாடி வருகின்றன. நேற்றும் 24.04.2021 மற்றும் இன்று 25.04.2021 இடம்பெறவுள்ள இறுதிப் போட்டிகளில் வெற்றி அணிகள் தீர்மானிக்கப்படவுள்ளன.

இதில் ஒரு அணியான DTS அணிக்கான சிறியதொரு அனுசரணையை எமது “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” வழங்கி உதவியுள்ளது. மேற்படி அனுசரணைக்கான உதவி கோரலை புளொட் அமைப்பின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ சித்தார்த்தன், புளொட் யாழ்.மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான கஜதீபன் ஆகியோரிடம் முன்வைக்கப்பட்ட நிலையில், இந்த அனுசரணையை இன்று எமது புளொட் அமைப்பின் உறுப்பினரும் யாழ்.மாநகரசபையின் 02ஆம் வட்டார உறுப்பினருமான ப.தர்சானந் அவர்கள் நேரில் கலந்து கொண்டு வழங்கி இருந்ததுடன், குறித்த அணியிருடன் கலந்துரையாடியும் இருந்தார். இந்நிகழ்வில் குறித்த அரியாலை வட்டாரத்தின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாநகரசபை உறுப்பினரான திருமதி. நளினா பிறேம்லால் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.

குறித்த DTS அணியினர் குறித்த GPL தொடரில் நேற்று தாம் கலந்து கொண்ட 02ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளதுடன், நேற்றைய தாம் கலந்து கொண்ட ஆட்டத்தில், நேற்று கலந்து கொண்ட அனைத்து அணிகளை விடவும் அதிக ஓட்டங்களை குவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கதுடன் இன்று இடம்பெறவுள்ள 03ஆம் போட்டியில் வெற்றி பெற்றதும் நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா.

25.04.2021

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.