;
Athirady Tamil News

நீரில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு!! (படங்கள் வீடியோ)

0

பாடசாலைக்கு சிரமதானம் செய்யப்போவதாக கூறிவிட்டுச் சென்ற மாணவன், நண்பர்களுடன் கிணற்றில் நீந்திய போது அதில் நண்பர்கள் மற்றும் அந்தப் பகுதி மக்களால் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளார். மூளாயைச் சேர்ந்த பிரபாகரன் ரஜீவன் ( வயது – 18 ) என்ற மாணவனே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

சுழிபுரம் திக்கரைப் பகுதியிலுள்ள கிணற்றிலேயே நண்பர்களுடன் இணைந்து மேற்படி மாணவன் நேற்று(6) மாலை 3 மணியளவில் நீந்தியுள்ளார். திடீரென அவர் மூழ்கத் தொடங்கியதும் , நண்பர்கள் அயலில் உள்ளவர்களை அழைத்துள்ளனர். அவர்கள் மாணவனை மீட்டு மூளாய் வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர். அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.