;
Athirady Tamil News

தென் மண்டல முதல்வர்கள் மாநாடு- திருப்பதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்…!!

0

திருப்பதியில் உள்ள தாஜ் நட்சத்திர ஓட்டலில் வரும் 14-ந்தேதி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில், தென் மண்டல வளர்ச்சி குறித்து முதல்வர்கள் மாநாடு நடைபெற உள்ளது.

இதில் ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மாநில முதல்வர்கள் மற்றும் புதுச்சேரி, அந்தமான், நிக்கோபார், லட்சத்தீவு யூனியன் பிரதேசங்களின் கவர்னர்கள் பங்கேற்கின்றனர்.

இதில் தென்னிந்தியாவின் வளர்ச்சி, பிரச்சனைகள் குறித்து ஆலோசனை நடத்தப்படும். இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ள தாஜ் ஓட்டல் ஏற்கெனவே போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த ஓட்டல் மட்டுமின்றி, இப்பகுதி முழுவதும் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

திருப்பதி எஸ்.பி. வெங்கட அப்பல நாயுடு தலைமையில் போலீஸ் அதிகாரிகள் தாஜ் ஓட்டல் மற்றும் முதல்வர்கள், ஆளுநர்கள் வரும் ரேனிகுண்டா விமான நிலையத்திலிருந்து திருமலை வரை பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி உள்ளனர்.

அப்பகுதிகளை 24 மணி நேரமும் சிசிடிவி கேமரா மூலம் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

ஆலோசனை கூட்டம் முடிந்த பின்னர் இதில் பங்கேற்ற வி.ஐ.பி.க்கள் திருப்பதி கோவிலுக்கு தரிசனத்திற்கு செல்லும் வாய்ப்பு உள்ளதால், திருமலையில் அவர்களுக்கு தங்கும் அறைகள், சாமி தரிசன ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.