;
Athirady Tamil News

ரூ.36,200 கோடி செலவில் கங்கா விரைவுச்சாலை- பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்..!!

0

உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜகான்பூரில் ரூ.36,200 கோடி செலவில், 594 கிலோ மீட்டர் தொலைவிற்கு கங்கா விரைவுச்சாலை அமைக்கப்படவுள்ளது.

இந்த விரைவுச்சாலை அமைக்கும் பணியை வரும் 18-ம் தேதி (நாளை மறுநாள்) பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கவுள்ளார். இந்த விரைவுச்சாலையில் இந்திய விமானப்படை விமானங்கள் அவசரமாக பறப்பதற்கும், தரை இறங்குவதற்கும் ஏதுவான வகையில் சுமார் 3.5 கிலோ மீட்டர் தொலைவில் விமான ஓடுதளம் ஒன்றும் அமைக்கப்படவுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.