;
Athirady Tamil News

எத்தனாலுக்கான ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக திடீர் குறைப்பு…!!

0

மத்திய அரசு எத்தனால் கலந்த பெட்ரோல் திட்டத்தின் கீழ் வாங்கப்படும் எத்தனாலுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைத்து உத்தரவிட்டுள்ளது.

கார்பன் மாசுவை குறைப்பதற்கு எத்தனால் கலந்த பெட்ரோலை அதிக அளவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது மட்டுமில்லாமல் எத்தனால் கலந்த பெட்ரோலை பயன்படுத்துவதன் மூலம் வாகனத்தின் எஞ்சினுக்கு வழங்கப்படும் ஆற்றல் அதிகரிப்பதுடன், எரிபொருளின் தேவையும் குறையும் என்பதால் தற்போது 8.5 சதவீதம் மட்டுமே பயன்பாட்டில் இருக்கும் எத்தனால் கலந்த பெட்ரோலை 2025-ம் ஆண்டுக்குள் 35 சதவீதம் கொண்டு வர முடிவு செய்துள்ளது.

இதனால் தற்போது எத்தனால் கலந்த பெட்ரோல் திட்டத்தின் கீழ் வாங்கப்படும் எத்தனாலுக்கான ஜிஎஸ்டி வரியை 5 சதவீதமாக குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.