;
Athirady Tamil News

கஞ்சா செடி பயிரிட்ட நபர் ஒருவர் கைது!!

0

மட்டக்களப்பு வவுணத்தீவு பொலிஸ் பிரிவிலுள்ள நெடுஞ்சேனை பிரதேசத்தில் பண்ணையொன்றில் கஞ்சா செடியை பயிரிட்டு அதனை வெட்டி மறைத்து வைத்திருந்த ஒருவரை 250 கிராம் கஞ்சா செடியுடன் நேற்று (19) கைது செய்ததுள்ளதாக வவுணத்தீவு பொலிசார் தெரிவித்தனர்.

விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவ தினமான நேற்று குறித்த பண்ணையை பொலிசார் முற்றுகையிட்டு அங்கு மறைத்து வைத்திருந்த கஞ்சா செடியுடன் ஒருவரை கைது செய்தனர்.

சந்தேகநபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.