;
Athirady Tamil News

யாழில் இளைஞனின் உயிரை பறித்த கார் ; ஒருவர் கைது

0

யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பலாலி – யாழ்ப்பாணம் வீதியில், யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த கார் ஒன்று எதிர்திசையிலிருந்து வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 28 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளார்.

காயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்துநர் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

மேலதிக விசாரணை
இவ்வாறு உயிரிழந்த நபர் 28 வயதுடைய கொக்குவில் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.

குறித்த கார் சாரதியும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மேலும் இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.