;
Athirady Tamil News

’அரசியல் நெருக்கடியை தீர்க்க வேண்டும்’ !!

0

நாட்டின் பொருளாதார நெருக்கடிக்குப் பின்னால் பாரிய அரசியல் நெருக்கடி ஒன்று இருப்பதாக தெரிவிக்கும் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய, அரசியல் நெருக்கடியை தீர்க்காது பொருளாதார நெருக்கடியை சரி செய்ய முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

தங்கல்லயில் நேற்று முன்தினம் (27) நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் பேரணியில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர், பல வருடங்களாக நாம் தயாராகிக்கொண்டிருக்கும் மாற்றத்தை தற்போது ஏற்படுத்த முடியும் என நினைக்கிறேன். அதனை எம்மால் உணர முடிகிறது. தற்போது எமக்குக் கிடைத்துள்ள வாய்ப்பை பயன்படுத்தி நாட்டை கட்டியெழுப்பு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்டுள்ளப் பொருளாதார நெருக்கடி எமது சமையலறைக்குள்ளும் வந்துள்ளது. இதனை எம்மால் தெளிவாகப் பார்க்க முடிகிறது. இந்த பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் பாரிய அரசியல் நெருக்கடி ஒன்று உள்ளதையும் நாம் மறந்துவிடக்கூடாது எனவும் தெரிவித்தார்.

அரசியல் நெருக்கடியை சரிசெய்யாது, பொருளாதார நெருக்கடியை சரி செய்ய முடியாது. நாட்டின் இந்நிலைமைக்குக் காரணமான அரசியல் கலாசாரத்தை மாற்றுவது எவ்வாறென சிந்திக்கவேண்டும் எனவும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.