முன்னாள் விடுதலை புலி உறுப்பினருக்கு ஆயுள் தண்டனை!!
விடுதலைப் புலிகளின் முன்னாள் புலனாய்வுப் பிரிவுத் தலைவராகக் கருதப்படும் முத்தப்பனின் கீழ் செயற்பட்ட விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த தங்கவேலு நிமலனுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
அதி சக்திவாய்ந்த இரண்டு கிலோகிராம் வெடிமருந்துகளை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சந்தேகநபருக்கு எதிராக மேலும் பல வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.