;
Athirady Tamil News

அருந்ததியின் மாற்று மோதிரம் நிகழ்வும், மணப்பெண் அலங்கார கண்காட்சியும்!!

0

அருந்ததியின் மாற்று மோதிரம் நிகழ்வும், மணப்பெண் அலங்கார கண்காட்சியும் நான்காவது தடவையாக யாழ்ப்பாணம் செல்வா பலஸ் மண்டபத்தில் எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இது தொடர்பில் தெளிவுபடுத்தும் விசேட ஊடக சந்திப்பு நேற்றைய தினம் யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியொன்றில் இடம்பெற்றது.

இதன்போது கருத்து தெரிவித்த அருந்ததியின் இயக்குநர் மேகலா,
திருமண மண்டபங்கள், திருமண ஆடைகள், மணப்பெண் அலங்காரம், மணப்பெண் அலங்கார பொருட்கள் மற்றும் புகைப்பட கலைஞர்கள் என பலருக்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுக்கும் முகமாகவே மாற்று மோதிர கண்காட்சியின் நோக்கம் என்றார்.

மேலும் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்ட செயலிழந்த துறைகளுக்கு புத்துயிரளிக்கும் வகையில் இந்த கண்காட்சி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியில் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் உள்ளிட்ட பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்- என்றார்.

இந்த ஊடக சந்திப்பில் க.கருணாகரன், தினகரன் பத்திரிகை பிரதம ஆசிரியர் செந்தில்வேலவர் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.