;
Athirady Tamil News

சர்வக் கட்சி மாநாட்டை மனோ அணியும் புறக்கணித்தது !!

0

சர்வக் கட்சி மாநாட்டைப் புறக்கணிப்பதாக தமிழ் முற்போக்குக் கூட்டணி அறிவித்துள்ளது.

இது தொடர்பில் அறிக்கை ஒன்றை விடுத்துள்ள கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், பொருளாதார துறையில் மட்டுமல்லாது, பொருளாதார வீழ்ச்சியின் தொடர்ச்சியாக நம் நாடு அரசியல், சமூக, கலாச்சார துறைகள் உள்ளிட்ட சகல துறைகளிலும் அதல பாதாளத்தில் விழுந்துள்ள பின்னணியில், சர்வகட்சி மாநாட்டில் கலந்துக்கொள்ளுமாறு விடுக்கப்பட்ட அழைப்பை கவனமாக பரிசீலித்து, இம்மாநாட்டில் கலந்துக்கொள்வதில்லை என தமிழ் முற்போக்கு கூட்டணி முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் தோல்வியை எதிரணியின் தலைகளில் சுமத்துவதற்கான முயற்சியாகவும், அரசாங்கத்தின் பங்காளி கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை திருப்திபடுத்த அரசாங்கம் செய்யும் முயற்சியாகவும், இந்த அழைப்பை, பிரதான எதிரணியான ஐக்கிய மக்கள் கூட்டணி கட்சியாக நாம் கணிக்கிறோம் எனவும் மனோ மேலும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.