;
Athirady Tamil News

யாழில் ஊரடங்கு வேளையில் ஊடகவியலாளர்களுக்கு பொலிசாரால் அச்சுறுத்தல்!! (படங்கள்)

0

யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களுக்கு பொலிசாரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவமொன்று இன்றையதினம் பதிவானது.

அரசாங்கத்திற்கு எதிராக பொது மக்களினால் போராட்டங்கள் முன்னெடுக்கப்படலாம் என்பதால் குறித்த போராட்டங்களை தடுக்கும் முகமாக நாடு பூராகவும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மக்கள் விடுதலை முன்னணியின் யாழ்ப்பாண மாவட்ட அலுவலகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு ஏற்பாடு செய்திருந்ததன் காரணமாக இன்றைய தினம் அங்கு ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிப்பதற்காக சென்றிருந்தனர்.

இந்நிலையில் ஊடகவியலாளர் சந்திப்பு நடக்கவிருந்த இடத்தைச் சுற்றி பொலிசார் குவிக்கப்பட்டு அலுவலகத்திற்கு முன்னால்
நிறுத்தப்பட்டிருந்த ஊடகவியலாளர்களின் மோட்டார் சைக்கிள்களை அலுவலகத்திற்குள்ளே நிறுத்துமாறு அச்சுறுத்தினர்.

அத்துடன் ஊடகவியலாளர்களை வீதியில் பயணிக்க முடியாது எனவும் ஊரடங்கு வேளையில் வீதியில் பயணிக்க அனுமதி இல்லை எனவும் தெரிவித்து கைத்தொலைபேசிகளில் ஒளிப்படங்களை எடுத்து அச்சுறுத்தினர்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன ஊரடங்கு வேளையில் அத்தியாவசிய தேவைகள் மற்றும் ஏனைய அன்றாட தேவைகளை கருதி வீதியில் பயணிப்போர் தமக்குரிய அலுவலக அடையாள அட்டையினை பயன்படுத்தி வீதிகளில் பயணிக்க முடியும் என ஊடக பேச்சாளரால் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாண பொலிசார் இதனை பின்பற்றுகின்றார்களா என்கிற கேள்வி எழுகிறது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

பேராதனையில் பதற்றம்​ !!

ICTA தலைவர் இராஜினாமா !!

வெளிவந்தது மாநாயக்க தேரர்களின் கூட்டறிக்கை !!

கொழும்பு, மஹரகமவில் பதற்றம் !!

விசேட செய்தி: பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படும் சாத்தியம் !!

அவசரகாலச் சட்டத்தை அதிரடியாக அமுல்படுத்திய ஜனாதிபதி கோட்டாபய !!

அமைச்சுப் பதவிகளில் இருந்து விலக சு.க முடிவு !!

சமூக ஊடகங்கள் முடக்கப்படுமா?

பொலிஸாரின் தாக்குதலில் படுகாயமடைந்த தெரண ஊடகவியலாளர்கள்!!

மேல் மாகாணத்தில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு!

தாம​ரை தடாகத்தின் முன்பாக போராட்டம் !!

கைதானவர்களின் ​விபரம் வெளியானது !!

மஹிந்தவும் நாமலும் மிரிஹானவுக்கு விஜயம்!!

இரவு 11 மணிக்கு கூடுகின்றது அமைச்சரவை !!

தீவிரவாத குழுவே தாக்குதல் !!

’நாட்டை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கவும்’ !!

ஜனாதிபதி வீட்டின் முன் கலவரத்தில் ஈடுபட்ட 45 பேர் கைது!!

நாட்டின் சில பகுதிகளுக்கு பொலிஸ் ஊடரங்கு உத்தரவு அமுல்…!!

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகைத் தாக்குதல்!! (வீடியோ)

போராட்டம் வன்முறையாக மாறி தொடர்கிறது – பேருந்து ஒன்று தீக்கிரை!! (வீடியோ)

You might also like

Leave A Reply

Your email address will not be published.