;
Athirady Tamil News

வாந்தியால் குழந்தை உயிரிழப்பு!!

0

வாந்தி மற்றும் வயிற்றுக் குத்து காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மூன்றரை வயதுக் குழந்தை நேற்றுமுன்தினம் உயிரிழந்துள்ளது.

உரும்பிராய் கிழக்கு உரும்பிராயைச் சேர்ந்த சந்திரமோகன் சாஜித் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது .

கடந்த 3 ஆம் திகதி வாந்தி மற்றும் வயிற்றுக் குத்து காரணமாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் குழந்தை சேர்க்கப்பட் டுள்ளது . இந்த நிலையில் நேற்றுமுன்தினம் மாலை குழந்தை உயிரிழந்துள்ளது .

திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் இறப்பு விசாரணை களை மேற்கொண்டார் .
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.