;
Athirady Tamil News

கொரோனா பணியில் ஈடுபட்டுள்ள சுகாதார பணியாளர்களுக்கான காப்பீடு திட்டம் மேலும் 6 மாதம் நீட்டிப்பு..!!

0

கொரோனா சிகிச்சை பணிகளில் ஈடுபட்டுள்ள சுகாதார பணியாளர்களுக்கு புதிய காப்பீட்டு திட்டத்தை மத்திய அரசு கடந்த 2020ம் ஆண்டு அறிவித்துள்ளது.

இந்தியாவில் 2020-ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து கொரோனா தொற்று பரவி வருகிறது. இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு வரும் லட்சக்கணக்கான நோயாளிகளை மீட்டெடுப்பதில் மருத்துவ உலகம் முக்கிய பங்காற்றுகிறது.

கொரோனாவுக்கு எதிராகப் போராடுவதில் சுகாதார பணியாளர்கள் முன்களத்தில் உள்ளனர். இதனால் அவர்கள் கொரோனா போர்வீரர்கள் என்றே (கொரோனா வாரியர்ஸ்) அழைக்கப்படுகிறார்கள்.

கொரோனாவுடன் அன்றாடம் போராடி வரும் இவர்களும் அவ்வப்போது கொரோனா தாக்கி மரணத்தைத் தழுவுவது உண்டு. பலர் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று மீண்டு வருகின்றனர்.

கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் வீரர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் பாதுகாக்கும் பொருட்டு மத்திய அரசு 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் இந்த சுகாதார பணியாளர்களுக்கு காப்பீட்டு திட்டத்தை அறிவித்தது.

இதற்கிடையே, பிரதான் மந்திரி கரீப் கல்யாண் தொகுப்பு எனப்படும் காப்பீடு திட்டத்தின் கால அளவு இந்த ஆண்டு ஏப்ரல் 19ம் தேதியுடன் முடிவடைகிறது.

இந்நிலையில், கொரோனாவுடன் போராடும் சுகாதார ஊழியர்களுக்கான காப்பீடு திட்டத்தை மேலும் 180 நாட்களுக்கு நீட்டித்து மத்திய அரசு இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.