;
Athirady Tamil News

யாழ் பிரபல பல்பொருள் அங்காடியில்சலவைப்பவுடர்களை மக்கள் முண்டியடித்து வாங்கிச் செல்கின்றனர்!!! (படங்கள்)

0

யாழ்ப்பாணம் பிரபல பல்பொருள் அங்காடியில் சவர்காரங்கள், சலவைப்பவுடர்களை மக்கள் முண்டியடித்து வாங்கிச் செல்கின்றனர். பொதுமக்கள் அவற்றினை அதிகளவில் கொள்வனவு செய்வதை அவதானிக்க முடிந்தது.

இதன் காரணமான குறித்த பல்பொருள் அங்காடியில் லக்ஸ், சன்லைட், லைபோய் சவர்காரங்கள் முழுவது விற்று தீர்ந்துள்ளது. நாட்டில் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பரவிய தகவலால் மக்கள் அச்சத்தில் இவ்வாறு பொருகளை கொண்வனவு செய்துள்ளனர்.

அதேவேளை கொழும்பில் உள்ள பல பல்பொருள் அங்காடிகளிலும் மக்கள் அதிகளவில் சவர்காரங்கள் சலவைப்பவுடர்களை வாங்கி செல்வதற்காக குவிந்துள்ளனர்.

இந்நிலையில் இது குறித்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் பரவி வருகின்றது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.