;
Athirady Tamil News

லிட்ரோ நிறுவனத்தில் அதிரடி தீர்மானம்?

0

பொருளாதார நெருக்கடியில் இருந்து நாடு மீளும் வரை நகரங்களுக்கும், அத்தியாவசிய சேவைகளுக்கும் மாத்திரம் எரிவாயு விநியோகிக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த முடிவால் தினசரி எரிவாயு விநியோகம் 60,000 முதல் 80,000 சிலிண்டர்களில் இருந்து 30,000 சிலிண்டர்கள் வரை குறைக்கப்படும் என்றும், 27 சதவீத எரிவாயு நுகர்வோர் மட்டுமே எரிவாயுவைப் பயன்படுத்துவர் என்றும் அவர் கூறினார்.

தற்போதைய சூழ்நிலையில், நாட்டின் மாதாந்த எரிவாயு தேவையை பூர்த்தி செய்ய மாதமொன்றுக்கு 30 மில்லியன் டொலர்கள் தேவைப்படுவதால், அவ்வாறான செலவுகளை மேற்கொள்ள முடியாது எனவும், நாட்டை மீளக் கட்டியெழுப்ப அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.