;
Athirady Tamil News

ஒக்டேன் 95 பெற்றோல் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!!

0

முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு ஒக்டேன் 95 பெற்றோல் வழங்கப்பட மாட்டாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

சில முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் சாரதிகள் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக ஒக்டேன் 95 பெற்றோலை சேகரிப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இன்று காலை நிலவரப்படி, இலங்கையில் ஒக்டேன் 95 பெற்றோல் 6,142 மெட்ரிக் தொன் மட்டுமே கையிருப்பில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.