ஆயிஷாவை கொன்றேன்: சந்தேகநபர் ஒப்புதல் வாக்குமூலம் !!
![](https://www.athirady.com/wp-content/uploads/2022/05/image_226bd130a4.jpg)
பண்டாரகம, அட்டுலுகமவைச் சேர்ந்த 9 வயதான பாத்திமா ஆயிஷா படுகொலை தொடர்பில், 29 வயதான நபரொருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், சிறுமியை கடத்திச் சென்று, கொலைச் செய்துவிட்டேன் என பொலிஸாரிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
பிரேத பரிசோதனை அறிக்கையின் பிரகாரம், சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை எனத் தெரிவித்த பொலிஸார், சந்தேகநபரை இன்றையதினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.