;
Athirady Tamil News

இன்று கடமைகளை பொறுப்பேற்கிறார் விக்கும் லியனகே !!

0

இன்று முதல் அமுலாகும் வகையில் பாதுகாப்பு படைகளின் பிரதானியாக ஜெனரல் சவேந்திர சில்வா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ள அதே வேளையில், மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே இலங்கையின் புதிய இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளதுடன் இன்று தனது கடமைகளை அவர் பொறுப்பேற்றவுள்ளதாக இலங்கை இராணுவ ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பாதுகாப்புப் படைகளின் பதில் பிரதானி, ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷவினால் நேற்று (31) முற்பகல் கோட்டை ஜனாதிபதி மாளிகையில் நியமனக் கடிதம் கையளிக்கப்பட்டது.

இராணுவத் தளபதியாகவும், பாதுகாப்புப் படைகளின் பதில் பிரதானியாகவும் செயற்பட்ட சவேந்திர சில்வா நேற்று (31) இராணுவத் தளபதி பதவியிலிருந்து இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, பாதுகாப்புப் பதவி நிலை தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.