அநுரகுமார – சீனத்தூதுவர் சந்திப்பு !!
ஜே.வி.பியின் தலைவர் அனுர திஸாநாயக்கவுக்கும் இலங்கைக்கான சீனத் தூதுவர் சீ சென்ஹொங் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (02) ஜே.வி.பி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது.
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் நிலவரங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், கட்சிகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.