;
Athirady Tamil News

’பைத்தியத்தை நிரூபித்துவிட்டார்’ !!

0

விவசாயத்துறையை நாசமாக்கியதன் ஊடாக தனக்கு பைத்தியம் என்பதை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நிரூபித்துள்ளார். ஜனாதிபதிக்கு பைத்தியம் என மக்கள் கூறுவதற்கு இதனைவிட வேறேதெனவும் உதாரணங்கள் அவசியமா? என ஐக்கிய மக்கள் சக்தியின பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்,

பிரதமர் பதவியை ஏற்றதும் ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தன்னுடன் இணைந்து செயற்பாடுவார்கள் என பிரதமர் ரணில் நினைத்தார். எனினும் ரணிலுடன் மீண்டும் இணைந்து செயற்படுமளவுக்கு ஐக்கிய மக்கள் சக்தி முட்டாள்தனமான கட்சியல்ல எனவும் தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை மக்கள் பைத்தியம் என்கிறார்கள். நாட்டின் விவசாயத்துறையை நாசமாக்கியதன் ஊடாக தனக்கு உண்மையில் பைத்தியம் என்பதை ஜனாதிபதி நிரூபித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக பதவி விலகியதன் பின்னர் ஜனாதிபதிக்கு உளரீதியான பிரச்சினைகள் காணப்படுவதாகவும் கூறினார். 69 இலட்சம் வாக்குகளைப் பெற்ற ஜனாதிபதிக்கு 69 வாக்குகள் கூட இப்போது கிடையாது எனவும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.