;
Athirady Tamil News

கிளிநொச்சியில் 208 கிலோ கேரள கஞ்சா மீட்பு !!

0

கிளிநொச்சி – விவேகானந்த நகரில் உள்ள வீடு ஒன்றிலிருந்து 208 கிலோ கேரள கஞ்சா
கைப்பற்றப்படடுள்ளது.

குறித்த வீட்டிடில் நேற்று (03) மாலை 6 மணியளவில் விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைத்து தேடுதல் மேற்கொண்ட போது, சொகுசு வானத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், 208 கிலோ கேரள கஞ்சா கைப்பற்றப்படடுள்ளது.

சம்பவத்தில், மன்னாரிலிருந்து விவேகானந்த நகர் கிராமத்திற்கு வந்து வாடகைக்கு வீடு ஒன்றினை பெற்று வசித்து வந்தவர்களே இந்த செயலை செய்திருப்பதுடன், இதில் சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார் என விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட வாகனம் மற்றும் சந்தேகநபரை சட்ட நடவடிக்கைகளுக்காக விசேட அதிரடிப்படையினர் கிளிநொச்சி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்..

You might also like

Leave A Reply

Your email address will not be published.