கிளிநொச்சியில் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட 02 வயது பெண் குழந்தை
கிளிநொச்சி- பிரமந்தனாறு ஆறாம் வாய்க்கால் பகுதியில் பாதுகாப்பற்ற கிணற்றில் வீழ்ந்து இரண்டு வயது பெண் குழந்தை உயிரிழந்துள்ளது.
குறித்த சம்பவமானது நேற்றையதினம்(22) இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி- பிரமந்தனாறு 06ஆம் வாய்க்கால் பகுதியில் தங்கி இருந்த குடும்பத்திலுள்ள இரண்டு வயது மதிக்கத்த குழந்தை யொன்று கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சம்பவம் தொடர்பில் தருமபுரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.