;
Athirady Tamil News

பொதுப்போக்குவரத்து தொடர்பில் விசேட கலந்துரையாடல் !!

0

நாட்டில் பொதுப்போக்குவரத்தில் நிலவும் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காண்பது தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் இந்த சந்திப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, எரிபொருள் பிரச்சினை காரணமாக பயணிகள் எதிர்நோக்கும் நெருக்கடிகளுக்கு தீர்வினை பெற்றுக்கொடுப்பது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், புதிய அலுவலக தொடருந்து சேவை உட்பட தொடருந்து சேவைகளை முன்னெடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.