;
Athirady Tamil News

வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு தனியார் பிரிவினரிடம் கோரிக்கை !!!

0

எரிபொருள் நெருக்கடி அதிகரித்துள்ள நிலையில், வீடுகளில் இருந்து வேலை செய்யும் முறைமையை பின்பற்றுமாறு தொழில் அமைச்சு தனியார் பிரிவினரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை தனியார் துறையினரும் பின்பற்றுவதில் எவ்வித பாதிப்பும் ஏற்படாதென அமைச்சின் செயலாளர் ஏ.ஜே. விமலவீர தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், நாட்டில் நிலவும் தற்போதைய நெருக்கடி நிலை வழமைக்கு திரும்பும் வரை அரசாங்கத்திற்கு தேவையான ஒத்துழைப்பினை வழங்குமாறு தனியார் பிரிவினரிடம் கோரிக்கை விடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.