;
Athirady Tamil News

இ.போ.ச டிப்போக்களில் எரிபொருள் பிரச்சினை !!

0

இலங்கை போக்குவரத்து சபை டிப்போக்களில் இருந்து தனியார் பஸ்கள் திட்டமிட்டபடி எரிபொருள் கிடைப்பதில்லை என்று தனியார் பஸ் சங்கப் பிரதிநிதிகள் போக்குவரத்து அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவிடம் இன்று (28) முறைப்பாடு செய்தனர்.

போக்குவரத்து அமைச்சில் இன்று (28) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது, ​​தனியார் பஸ்களுக்கு தொடர்ச்சியாக எரிபொருளை பெற்றுக்கொள்ளும் முறையொன்றை வழங்குமாறு தனியார் பஸ் உரிமையாளர்கள், போக்குவரத்து அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.

இது தொடர்பில் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்கவை தொலைபேசியில் தொடர்பு கொண்ட, போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன இவ்விடயம் குறித்து அறிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.