;
Athirady Tamil News

எருக்கலம்பால் விழுந்ததால் பெண்ணின் கண்பார்வை பாதிப்பு!!!

0

குடும்பப் பெண் ஒருவரின் கண்ணுக்குள் எருக்கலம்பால் விழுந்ததால் அவர் பார்வை இழக்கும் நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் .

சாவகச்சேரி கெருடாவில் பகுதியைச் சேர்ந்த சோகேஸ்வரன் நாகராணி ( வயது 52 ) என்ற குடும்பப்பெண், சதுர்த்திப் பூசைக்கு வெள்ளை எருக்கலைப்பூ பறிக்கும் போது பூவிலிருந்து பால் கண்ணுக்குள் விழுந்துள்ளது.

எனினும், அதைப் பொருட்படுத்தாது வழிபாடு முடித்து வீடு திரும்பும் போது அவருக்குக் கண் பார்வை தெரியாத நிலை காணப்பட்டது.
அதனையடுத்து அவர் சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.