;
Athirady Tamil News

அமைதியான போராட்டங்களை நடத்தலாம் – பொலிஸ் மா அதிபர் சீ.டீ.விக்ரமரத்ன!!

0

அமைதியான போராட்டங்களை நடத்த மக்களுக்கு உரிமை உண்டு என பொலிஸ் மா அதிபர் சீ.டீ.விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

அவர்களின் உரிமைகளை பொலிஸார் உறுதி செய்வார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று (07) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மக்கள் பிரதிநிதிகள், அரசியல்வாதிகள், மதத் தலைவர்கள் உள்ளிட்ட அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

அத்தோடு தனியார் மற்றும் அரச சொத்துக்களுக்கு சேதம் ஏற்படாத வகையில் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.

அதேநேரம், உத்தியோகபூர்வ கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அரச மற்றும் தனியார் பிரிவு சேவையாளர்களுக்கு இடையூறு விளைவிக்காது சட்டத்திற்கு உட்பட்டு அடிப்படை உரிமைகளை அனுபவிக்குமாறு பொலிஸ் மா அதிபர் சீ.டீ.விக்ரமரத்ன கோரியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.