;
Athirady Tamil News

டெல்லியில் குளிர்சாதனப்பெட்டியில் இருந்து 50 வயது நபரின் சடலம் கண்டெடுப்பு..!!

0

வடகிழக்கு டெல்லியின் சீலம்பூர் பகுதியைச் சேர்ந்த 50 வயது நபர் ஒருவரின் சடலம் அவரது வீட்டில் உள்ள குளிர்சாதனப் பெட்டியில் நேற்று கண்டுபிடிக்கப்பட்டது. உயிரிழந்த நபரின் உறவினர் பெண் ஒருவர் நேற்று இரவு 7.15 மணியளவில் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். அவர் பதிலளிக்காததை அடுத்து அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவர் இறந்த நிலையில் குளிர்சாதனப்பெட்டியில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், குளிர்சாதனப் பெட்டியில் இருந்த சடலத்தை மீட்டு, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த நபர் ஜாகீர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். முதற்கட்ட விசாரணையில் அவர் வீட்டில் தனியாக வசித்து வந்ததாகவும், அவரது மனைவி மற்றும் குழந்தைகள் தனித்தனியாக வசித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.