;
Athirady Tamil News

5 இலட்சம் வாகனங்கள் எரிபொருள் பெற்றுக்கொண்டன. !!

0

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தின் ஊடாக கடந்த (21)ஆம் திகதி முதல் நேற்று (28)ஆம் திகதி இரவு வரை 536,055 வாகனங்கள் எரிபொருளைப் பெற்றுள்ளதுடன் 536 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து கியூ.ஆர். குறியீட்டின் பிரகாரம் நேற்று மாத்திரம் 187,005 எரிபொருள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் திரு.காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

தற்போது 826 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறைமைக்கு இணங்குவதாகவும், நேற்றிரவு வரை மொத்தம் 4,479,376 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.