;
Athirady Tamil News

காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் பாதுகாப்பு படையினர் கடும் துப்பாக்கி சண்டை..!!

0

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளின் கொட்டத்தை அடக்க பாதுகாப்பு படை வீரர்களுடன் சேர்ந்து போலீசாரும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை பாராமுல்லா மாவட்டம் வானிஹாம் பாலா கிரீரி பகுதியில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் அங்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மறைந்து இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினார்கள். அவர்களுக்கு இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது. அங்குள்ள குடியிருப்பில் பதுங்கிய 2 பயங்கரவாதிகள் இதில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது. இந்த சண்டையில் உயிர் இழப்பு எதுவும் ஏற்பட்டதா? என்ற விவரம் இதுவரை தெரியவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.