தேசிய கொடி ஏற்றும் இயக்கத்தில் பொதுமக்களின் பங்கேற்பு புதிய இந்தியாவை வலுப்படுத்தும்- பிரதமர் மோடி..!!
குஜராத் மாநிலம் சூரத்தில் நடைபெற்ற மூவண்ணக்கொடி பேரணியில், காணொலி வாயிலாக பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: அனைவருக்கும், சுதந்திரதின அமிர்தப் பெருவிழாவின் வாழ்த்துகள். இந்தியா சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் நிறைவு இன்னும் சில தினங்களில், கொண்டாடப்பட உள்ளது. நாடு முழுவதும் மூலை,முடுக்கெல்லாம் மூவண்ணக்கொடி ஏற்றி, வரலாற்று சிறப்புமிக்க சுதந்திர தின கொண்டாட்டத்துக்கு நாம் அனைவரும் தயாராகி வருகிறோம்.
Download Best WordPress Themes Free Download