;
Athirady Tamil News

தமிழகத்தைச் சேர்ந்த 8 போலீஸ் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பதக்கம்..!!

0

சுதந்திர தின விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் போலீஸ் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழக காவல் துறையில் 8 பேருக்கு ஜனாதிபதி பதக்கம் அறிவிக்கப்பட்டு உள்ளது. போலீஸ் அதிகாரிகள் கே.சங்கர், ஈஸ்வர மூர்த்தி, மாடசாமி ஆகியோருக்கு தலைசிறந்த சேவைக்கான ஜனாதிபதி பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. சுதாகர், நாகஜோதி, சண் முகபிரியா, ராஜேந்திரன், சபரிநாதன் ஆகிய 5 போலீஸ் அதிகாரிகளுக்கு சிறந்த சேவைக்கான ஜனாதிபதி பதக்கம் வழங்கப்படுகிறது. மேலும் 4 தமிழக தீயணைப்பு வீரர்களுக்கும் ஜனாதிபதி சிறப்பு பதக்கம் வழங்கப்படுகிறது. தீயணைப்பு துறை வீரர்கள் ஆறுமுகம் ராமச்சந்திரன், கூத்தன் பஞ்சவர்ணம், பரமசிவம் கந்தசாமி ரங்கராஜன் ஆகியோருக்கு இந்த பதக்கம் வழங்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.