;
Athirady Tamil News

கர்நாடகத்தில் புதிதாக 1,573 பேருக்கு கொரோனா..!!

0

பெங்களூரு: கர்நாடகத்தில் நேற்று 31 ஆயிரத்து 981 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 1,573 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பெங்களூரு நகரில் 935 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. சாம்ராஜ்நகரில் 2 பேரும், தட்சிண கன்னடாவில் ஒருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். ஒரே நாளில் 1,100 பேர் குணம் அடைந்தனர். 9 ஆயிரத்து 777 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். கொரோனா பாதிப்பு விகிதம் 4.91 ஆக உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.