யாழ்ப்பாணம் , திருகோணமலையை சேர்ந்த 08 பேர் தமிழகத்தில் தஞ்சம்!!
![](https://www.athirady.com/wp-content/uploads/2022/08/432-750x430.jpg)
இலங்கையில் இருந்து மேலும் 08 பேர் கடல் வழியாக தமிழகம் சென்று தஞ்சமடைந்துள்ளனர்.
யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலையை சேர்ந்த 3 ஆண்கள் , 2 பெண்கள் மற்றும் 3 சிறுவர்களாக மூன்று குடும்பங்களை சேர்ந்த 08 பேரே படகொன்றில் தமிழகம் தனுஷ்கோடி பகுதியை சென்றடைந்து தஞ்சம் கோரியுள்ளனர்.
அவர்களை மீட்ட கடலோர பாதுகாப்பு பிரிவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமையும் 08 பேர் கடல் வழியாக தமிழகம் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”