வவுனியா சுந்தரபுரத்தில் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது!!
![](https://www.athirady.com/wp-content/uploads/2022/08/1562247976-arrested2-7-650x430.jpg)
வவுனியா சுந்தரபுரம் பகுதியில் நேற்று (24.08.2022) இரவு 8.00 மணிளவில் கேரளா கஞ்சாவுடன் ஒருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் 200 கிராம் கேரளா கஞ்சாவினை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் 30 வயதுடைய சந்தேகநபர் ஒருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் எவ்வாறு கேரளா கஞ்சா கிடைக்கப்பெற்றது போன்ற மேலதிக விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட நபரை வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆயர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்