;
Athirady Tamil News

மேலும் ஒரு மாணவி பாலியல் புகார்: கர்நாடக மடாதிபதி மீது 2-வது போக்சோ வழக்கு..!!

0

கர்நாடக மாநில முருக மடத்தின் மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு மீது பள்ளி சிறுமிகள் இருவர் பாலியல் புகார் அளித்தனர். அதன்பேரில் மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு கைது செய்யப்பட்டு கடந்த செப்டம்பர் 1-ந் தேதி முதல் நீதிமன்ற காவலில் உள்ளார். ஜாமீன் கோரி கர்நாடக நீதிமன்றத்தில் மடாதிபதி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டு உள்ள மனு விசாரணையில் உள்ளது. இந்நிலையில், கர்நாடக மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு மீது மேலும் ஒரு மாணவி பாலியல் புகார் அளித்துள்ளதை தொடர்ந்து அவர் மீது 2-வது போக்சோ வழக்கு பதியப்பட்டு உள்ளது. இதனால் கைதான மடாதிபதிக்கு ஜாமீன் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.