;
Athirady Tamil News

போதையில் மிதந்து மரணித்த ‘முதிய ஜோடி’!!

0

வயது முதிர்ந்த கணவனும், மனைவியும் மதுவுக்கு அடிமையான நிலையில், மது போதையில் மயங்கி விழுந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின் மரணமாகியுள்ள சம்பவமொன்று பதுளை வைக்கும்பர பெருந்தோட்டத்தில், 26 ஆம் திகதி மாலை இடம்பெற்றுள்ளது.

இவ்விருவருக்கும் மகளும், மகனும் உள்ளனர். திருமணம் முடித்து குடும்பத்தைவிட்டு பிரித்து மகன் வாழ்கின்றார். மத்திய கிழக்கு நாடொன்றில் மகள் தொழில் செய்து வருகின்றார். இவர் பெற்றோருக்கு அனுப்பும் பணத்தில் இவ்விருவரும் மதுவுக்கு அடிமையாகியுள்ளனர்.

இவ்விருவரும் கூடுதலாக மது அருந்தியதால் மயக்கமுற்று கீழே விழுந்துள்ளனர். அயலவர்கள் இவர்களை படல்கும்புரை அரசினர் மருத்துவமனையில் சேர்த்தனர். இவ்விருவரையும் பரிசோதனை செய்த டாக்டர்கள், இவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.