;
Athirady Tamil News

ராணுவ வீரர் சுட்டதில் 2 பொதுமக்கள் பலி..!!

0

காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாநிலத்தில் ராணுவ முகாம் ஒன்று உள்ளது. இன்று காலை 6.15 மணி அளவில் அந்த முகாம் முன்பு பாதுகாப்புக்கு குவிந்த ராணுவ வீரர் திடீரென துப்பாக்கியை எடுத்து பொதுமக்களை நோக்கி சுட்டார். இதில் ரஜோரியை சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளிகள் சலீந்தர் குமார், கமல் கிஷோர் இருவரும் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியானார்கள். ராணுவ வீரர் திடீரென பொதுமக்களை நோக்கி சுட்டது ஏன் என்று தெரியவில்லை. 2 பேர் கொல்லப்பட்டதை அறிந்ததும் அந்த பகுதி மக்கள் கடும் கோபத்துடன் திரண்டு வந்தனர். ராணுவ முகாம் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினார்கள். இந்த சம்பவம் தொடர்பாக ராணுவ உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.