;
Athirady Tamil News

மொட்டும் ஐ.தேகவும் ஒன்றிணைய முயற்சி!!

0

மொட்டுக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் தற்போதுள்ள ஆட்டம், கிடைத்த அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்வதற்கான ஆட்டமே என்று தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, ஆட்சி அதிகாரத்தைப் பாதுகாத்துக்கொள்ள இருதரப்பும் ஒன்றிணைய முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.

குருநாகல் மாவட்டம் பிங்கிரிய தேர்தல் தொகுதிக் கூட்டத்தில் சனிக்கிழமை (17) கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மொட்டு ஒன்று சேர்ந்து ஜனாதிபதிக்கு கிண்ணம் வழங்கி தொப்பி அணிந்துள்ளதாகவும், அவர்கள் இருவரும் இப்போது இரு தரப்பல்ல ஒரே தரப்பெனவும் சுட்டிக்காட்டினார்.

தண்ணீருக்குப் பயந்து பைத்தியக்கார நாய்களைக் குளிப்பாட்ட முடியாது எனவும் அதேபோன்றே, தேர்தல்களுக்கு பயந்த அரசாங்கத்தை தேர்தலுக்கு அழைத்துச் செல்ல முடியாது எனவும் குறிப்பிட்டார்.

உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கத்துக்கு தெரிந்த, கூறும் அனைத்து சதிகளையும் அரசாங்கம் செய்து கொண்டிருப்பதாக தெரிவித்த அவர், ஏற்றுக் கொள்ளத்தக்க காரணம் ஏதும் இல்லாவிட்டால் காலநிலை காரணத்தைக் கூட கூறி தேர்தலை ஒத்திவைப்பார்கள் என்றார்.

போலிக் கூட்டணியில் சேர்ந்து நாட்டை சீரழிப்பதற்குப் பதிலாக, தூய அணியுடன் இணைந்து இலங்கை முதல் நிலைக்கு ஸ்தானப்படுத்த அழைப்பு விடுப்பதாகவும் கூறினார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்பாட்டுப் பிரதானியும் எம்.பியுமான நளின் பண்டார இதனை ஏற்பாடு செய்திருந்ததோடு, ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பிக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.