;
Athirady Tamil News

இன்றும் நாட்டின் பல பகுதிகளில் மழை!!

0

கிழக்கு, ஊவா, தெற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் அதேவேளை, நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கு மேல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இந்தநிலையில் நாட்டின் ஏனைய பகுதிகளில் சில இடங்களில் 75 மில்லி மீற்றர் அளவில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.