;
Athirady Tamil News

தீவகத்தில் மாவீரர் குடும்பங்களுக்கு நிதியுதவி!! ( படங்கள் இணைப்பு )

0

சாட்டி மாவீர துயிலுமில்லம் தீவக நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவினரின் ஏற்பாட்டில் 26 – 12 – 2022 அன்று பிற்பகல் 2 : 30 மணிக்கு தீவகத்தில் வாழ்கின்ற அறுபது
மாவீரர் பெற்றோருக்கான உதவித்தொகை கொடுப்பனவு வழங்கும் வேலணை உச்சிப்பிள்ளையார் கோவில் மண்டபத்தில் நடைபெற்றது.

இச்செயற்பாட்டினை மேற்கொள்வதற்காக
வேலணை பாலா ஊடாக அமரர். தரணீகரன் மனோகரன் நினைவாக அவரின் குடும்பத்தினர் மூன்று இலட்ச ரூபாயினை வழங்கியிருந்தனர்.

இந்நிகழ்வில்
தீவக நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவின் உறுப்பினர்களான மாணிக்கவாசகர் இளம்பிறையன், கருணாகரன் நாவலன் , கோணேஷ் குயிலன் , அ. கனகையா, தனூபன் , கோபால் , கஜேந்திரகுமார் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

தகவல்.. திரு.குணாளன் புங்குடுதீவு.

You might also like

Leave A Reply

Your email address will not be published.