;
Athirady Tamil News

உச்ச நீதிமன்றத்திற்கு மகள்களை அழைத்து வந்த தலைமை நீதிபதி: நீதிபதிகள் அறை, வாதிடும் இடத்தை பார்த்தனர்!!

0

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் நேற்று தனது 2 மகள்களை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்து சுற்றிக்காட்டினார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.ஒய். சந்திரசூட் கடந்த நவம்பர் 9ம் தேதி பதவி ஏற்றார். அவருக்கு பிரியங்கா (20), மஹி (16) என்ற 2 மகள்கள் உள்ளனர். நேற்று காலை 10 மணிக்கு திடீரென தனது 2 மகள்களையும் அழைத்துக்கொண்டு அவர் உச்ச நீதிமன்றம் வந்தார்.

அங்கு தான் பணி செய்யும் தலைமை நீதிபதி அறை, நீதிமன்ற அறை, மூத்த நீதிபதிகள் அறை உள்ளிட்ட இடங்களை சுற்றிக்காட்டினார். பின்னர் அறை எண் 1ல் உள்ள தலைமை நீதிபதி விசாரிக்கும் நீதிமன்றத்திற்கு இருவரையும் அழைத்துச் சென்று நீதிமன்றம் செயல்படும் விதத்தைக் காட்டினார். பின்னர் தனது அறைக்கு அழைத்துச் சென்றார். உச்ச நீதிமன்றத்தைப் பார்க்க மகள்கள் விருப்பம் தெரிவித்ததையடுத்து அவர்களை தலைமை நீதிபதி சந்திரசூட் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்ததாக உச்ச நீதிமன்ற மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.