;
Athirady Tamil News

கவர்னர் மாளிகை முன்பு 20-ந்தேதி முற்றுகை போராட்டம்: மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி அறிவிப்பு!!

0

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினர் சாமுவேல்ராஜ் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில், மத்திய அரசு உடனடியாக கவர்னரை திரும்ப வலியுறுத்தி வருகிற 20-ந்தேதி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் கவர்னர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம், மதுரை எய்ம்ஸ் பணிகளை உடனடியாக தொடங்ககோரி வருகிற 24-ந்தேதி சு.வெங்கடேசன் எம்.பி. தலைமையில் மதுரையில் கையில் செங்கல் ஏந்தி போராட்டம், கோவையில் அடுத்த மாதம்(பிப்ரவரி) இறுதியில் தொழில் பாதுகாப்பு மாநில சிறப்பு மாநாடு நடத்துவது என்பது உள்ளிட்ட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் சம்பத், வாசுகி, சண்முகம் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.