;
Athirady Tamil News

சிறுப்பிட்டியில் இ.போ.ச பேருந்து விபத்து!! (PHOTOS)

0

யாழ்ப்பாணத்து இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் தெய்வாதீனமாக எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை 750 ஆம் இலக்க வழித்தட பேருந்து ஒன்றே பருத்தித்துறை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வேளை, இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை சிறுப்பிட்டி பகுதியில் வேக கட்டுப்பாட்டை இழந்து , வாகன திருத்தகத்தினுள் சென்று விபத்துக்கு உள்ளானது.

குறித்த விபத்தில், விபத்திற்கு உள்ளான பேருந்தும், வாகன திருந்தகத்தினுள் நின்ற வாகனங்களும் சேதமடைந்துள்ளன.

சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.