;
Athirady Tamil News

வசந்தவை விடுதலை செய்க: மனித உரிமை அமைப்புகள்!!

0

வசந்த முதலிகேவின் தன்னிச்சையான தடுப்புக்காவலை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஏழு மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

வசந்த முதலிகேவின் பிணை மனு மீதான விசாரணை, இன்று நீதிமன்றத்தில் நடத்தப்படவுள்ளது.

எனினும், அரசாங்கத்தின் சார்பாகச் செயல்படும் சட்டமா அதிபர் திணைக்களம் அதை எதிர்த்தால் நீதிமன்றம் பிணையை அனுமதிக்காது என மனித உரிமை அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.

சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் மற்றும் மேம்பாட்டுக்கான ஆசிய மன்றம், சிவிகஸ், முன்னணி பாதுகாவலர்கள், மனித உரிமைகள் கண்காணிப்பகம், இலங்கை தொடர்பான சர்வதேச செயற்குழு மற்றும் சமாதானம் மற்றும் நீதிக்கான இலங்கை பிரசாரம் என்பன இந்த கோரிக்கையை விடுத்துள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.