;
Athirady Tamil News

பங்குச்சந்தை முறைகேடு- சித்ரா ராமகிருஷ்ணனுக்கு ஜாமீன்!!

0

தேசிய பங்குச்சந்தையின் நிர்வாக இயக்குனராக சித்ரா ராமகிருஷ்ணன் கடந்த 2013 முதல் 2016-ம் ஆண்டு வரை பணியாற்றி வந்தார். அப்போது அவர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) குற்றம் சாட்டியது. முன்அனுபவம் இல்லாத ஆனந்த் சுப்ரமணியன் என்பவரை தலைமை வியூக அதிகாரியாக நியமித்து பிற சலுகைகளை வழங்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. சி.பி.ஐ. வழக்கில் ஏற்கனவே ஜாமீன் வழங்கப்பட்டிருந்த நிலையில் அமலாக்கத்துறை வழக்கிலும் ஜாமீன் வழங்கி டெல்லி உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.